30 நவம்பர், 2009

திருமலை மீனவர் கொலை : சந்தேகத்தில் கடற்படை வீரர் மூவர் கைது


சீனன்குடா பகுதியில் காணாமல் போன சிங்கள மீனவ இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 கடற்படைச் சிப்பாய்கள் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன இம்மீனவருக்கும் கொட்டியாகுடா கடற்படை முகாம் சிப்பாய்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் என்றும் கூறுப்படுகின்றது.

குறித்த மீனவர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழுவொன்று விசாரனைகளை மேற் கொண்டதாகவும் இதனையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, கடற்படையும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெருவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையிலான பிரச்சினை ஒன்றின் விளைவாகவும் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகக் கடற் படையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக சில தகவல்கள் தங்களுக்குத் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக