24 அக்டோபர், 2009


கடந்த .17.10.09

வவுனியாவில் துப்பாக்கி முனையில் பணம், நகைகள் கொள்ளை!கொள்ளையரை கைது செய்ய முனைந்தபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொதுமகன் ஒருவர் பலி! நீங்கள் அறிந்ததே


வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் கடந்த17 . 10.2009 . தனி நபர் ஒருவர் பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அவரைத் துரத்திப்பிடித்த ஊரவர்களை நோக்கி இந்நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்; மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

ராமமூர்த்தி புலேந்திரன்(36 வயது) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமானார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு கிருபாகரன்
இன்று மரணமானார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக