24 செப்டம்பர், 2009

புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய ஆளும்கட்சியின் சிலாபம் மாநகரசபை உறுப்பினர் கைது-

புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின்பேரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியின் சிலாபம் மாநகரசபை உறுப்பினர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். சிலாபம் மாநகரசபை உறுப்பினரான வர்ணகுலசூரிய ஜோசப் அன்ரனி ரொட்ரிகோ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். புலிகளுடன் தொடர்புகளை பேணியமை, மற்றும் சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. சிலாபம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து பலரை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவோரில் புலி உறுப்பினர்களும் அடங்குவதாக குற்றம் சுமத்தியுள்ள பொலிசார், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக