24 செப்டம்பர், 2009

இந்திய மீனவர்கள் 21 பேரும் இன்று விடுதலை

கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 16ஆம் திகதி இவர்கள தலைமன்னார் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த 21 மீனவர்களையும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை 21 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மாஸா ஜபருள்ளாஹ் ஆஜராகியிருந்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி ஏ. யூட்சன், 21 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ததோடு அவர்களை இந்தியக் கடலோரக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படியும் அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலங்கைக் கடற்படையினருக்கு உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக