24 செப்டம்பர், 2009

மட்டகளப்பு நகரில் நகரசபைக்கு சமீபமாக புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு



மட்டக்களப்பு மாநகரசபைக்குச் சமீபமான மாநகரசபை காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று 23-09-2009 காலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மீட்டெடுத்தனர்.

நகரசபை தொழிலாளிகள் இக்க்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதில் 8 கிளைமோர் குண்டுகளும், மோட்டார் குண்டுகள் 31ம் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது.

இக்குண்டுகல் புதைக்கப்பட்டிருந்தது பற்றி மாகாண தென்பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலகவின் பணிப்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக