24 செப்டம்பர், 2009

வவுனியாவில் சயனைட் அருந்தி தற்கொலை செய்த யுவதி அடையாளம் காணப்பட்டார்-

வவுனியா உக்குலாங்குளம் பிரதேசத்தில் படையினரால் கைது செய்யப்பட்டபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த 29வயதான பாக்கியநாதன் கௌரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இவருடன் தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட யுவதி 26வயதுடைய கண்ணகி என்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 2006ம் ஆண்டுமுதல் இவர்கள் இருவரும் இங்கு வீடொன்றில் தங்கிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். சயனைட் அருந்தி தற்கொலை செய்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணும் கைதான பெண்ணும் புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக