26 ஜூலை, 2010

நிபுணர் குழு விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை




ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பான விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் அமெரிக்காவையும் தென்னாபிரிக்காவையும் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை கொண்ட மேற்படி ஐக்கியநாடுகள் குழு, செயலாளர் நாயகத்தினால் சம்பிரதாய முறைப்படி நியமிக்கப்பட்ட பின்னர் நியூயோர்க்கில் இன்னமும் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்றும் பிலஸ்தாப ராஜதந்திரி கூறினார்.

எவ்வாறாயினும், குழு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோராதிருப்பது ஒருபுறமிருக்க, ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இவர்களுக்கு விசா கோரி விண்ணப்பித்தாலும் விசா வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குழுவின் செயற்பாடு பற்றி தெரிவித்த போது, தம்மால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒரு விசாரணைக்குழு அல்லவென்றும் கடந்த மே மாதம் 23ஆம் திகதி ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்øக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையின் குறிக்கோள்களை முன்னெடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.

குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் ஏற்கெனவே பிபிசிக்கு கருத்து தெரிவித்த போது, தமக்கும் தமது இரு சகாக்களுக்கும் விசா வழங்குவதில்லை என்ற இலங்கையின் தீர்மானம் துரதிஷ்டவசமானதே என்று குறிப்பட்டுள்ளார். இலங்கையில் நிவவும் உண்மை நிலையை கண்டறிவதற்கு இது தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனு உயர்நீதிமன்றில் புதனன்று விசாரணை





பொலிஸ்மா அதிபர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று குற்றம் சாட்டி பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர்.ஜெயவர்தன உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தன சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவுக்கு ஊடாக தாக்கல் செய்த மேற்படி மனுவில், தாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை முடியும் வரை தம்மை கட்டாய லீவில் அனுப்புவது என்ற தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 25ஆம் திகதி தமக்கு இடைக்கால ஆறுதலை வழங்கியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி வேண்டுமென்றே தெரிந்து கொண்டும் விருப்பத்துடனும், தாம் நீதிமன்ற உத்தரவின்படி கடமையை செய்ய வசதியாக தமது உத்தியோகபூர்வ சீருடைகளையும் வாகனத்தையும் தமக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க தவறிவிட்டார் என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்மூலம் பொலிஸ்மா அதிபர் தொடர்ச்சியாக வேண்டுமென்றே நீதிசேவை நடைமுறைகளை தடைப்படுத்தி இடைக்கால தடை உத்தரவை செயல்படாமல் செய்துள்ளார் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் நடத்தை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துவத்தை அலட்சியப்படுத்தவதாகவும் சிறுமைப்படுத்தவதாகவும் உள்ளது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியதன் மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் மனுதாரர் முறைப்பாடு செய்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மனுதாரரை கட்டாய லீவில் அனுப்புவது என்று பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் பேரில் தமக்கிடப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதென நீதிமன்றம் மே மாதம் 25ஆம் திகதி அறிவித்திருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிப்பு நடந்தேறுவதை உறுதிப்படுத்துவதில் தாம் வெற்றிகண்ட போதிலும் பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியே தாம் கட்டாய லீவில் அனுப்பப்பட்டதாகவும் மனுதாரர் அவரது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பி.ரி.ஐ. பக்டீரியாவை உடன் இறக்குமதி செய்துமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்





நாட்டு மக்களின் உயிரோடு விளையாடும் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான பி.ரி.ஐ. பக்டீரியாவை உடனடியாகக் கொள்வனவு செய்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

நோய் அறிகுறிக்கான இரத்தப் பரிசோதனைகளை

நடத்துவதற்கான அவசரப் பிரிவுகளை அனைத்து வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ரோசி சேனாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

டெங்குக் காய்ச்சலால் இதுவரையில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயினால் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.

ஆனால் அரசாங்கம் மக்களை உயிராபத்திலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது.

மக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசுவதாலேயே டெங்கு நுளம்புகள் பரவுகின்றன என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டுகிறார். அத்தோடு மக்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. இன்று கொழும்பு மாநகர சபை செயலிழந்துள்ளது. பல்வேறு நகர சபைகள் பிரதேச சபைகள் மக்களுக்கு குப்பைகளை கொட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.

மக்களுக்கு வசதிகளை வழங்காது மாறாக அவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. எமது நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக டெங்கு நுளம்புகளை ஒழிக்க முடியாதுள்ளது. பி.ரி.ஐ. பக்டீரியாவை கொள்வனவு செய்து ஹெலிகொப்டர் மூலம் விசுறுவதன் மூலம் இதனை ஒழிக்க முடியும். இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. செயலில் எதனையும் செய்யவில்லை. இந்த பக்டீரியாவை கொள்வனவு செய்வதற்கு ரூபா 18 கோடி செலவாகுமென்றும் அந்தளவு பணமில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஐஃபா நிகழ்ச்சியை 100 கோடி ரூபா செலவழித்து அரசாங்கத்தால் நடத்த முடியுமென்றால் நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு 18 கோடி ரூபாவை ஏன் அரசாங்கத்தால் செலவழிக்க முடியாது. முழு நாட்டையும் காவு கொண்டுள்ள டெங்குக் காய்ச்சலை கண்டறிவது தொடர்பாக நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் நான்கு நாளைக்கு பிறகே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றன. இதற்குள் நோயாளி இறந்து விடுகிறார். டெங்குக் காய்ச்சல் 5 வயது தொடக்கம் 11 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கே அதிகமாகப் பரவுகிறது. பதுளையில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந் நோயை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்கு அரசாங்க வைத்தியசாøலகளிலும் அவசர பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை தெளிவுபடுத்தும் விளம்பரங்களை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும்.

மக்களை தெளிவுபடுத்தும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட வேண்டும். நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி விசேட செயலணியை அமைக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். இத்தாலியில் வாழும் எமது நாட்டவர்கள் ஜூலை மாதம் விடுமுறையை கழிப்பதற்கு இலங்கைக்கு வருவது வழக்கம். ஆனால் இம்முறை டெங்கு தொற்று பீதி காரணமாக அவர்களது வருகை பாரியளவில் குறைந்துள்ளது.

அத்தோடு உல்லாசப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. மக்களின் உயிர்களைப் பறிப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் பின்னடையச் செய்யும் டெங்கு நுளம்புகளை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி சாரதி அனுமதிப் பத்திரம் பயன்படுத்தியவர் மன்னாரில் கைது





மன்னாரில் போலி சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்து வாகனங்களை செலுத்திய நபரொருவர் இன்று மாலை வீதி சேவை போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய மேற்படி நபரின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் பரிசோதனை செய்தவேளை போலி அனுபத்திரம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நாளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி பி.ஐ தில்ருக் பெரேரா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

25 ஜூலை, 2010

இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு

.


இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவியும் செயற்குழு உறுப்பினர் சத்யராஜும் இலங்கை சென்ற நடிகை அசினை கடுமையாக கண்டித்து பேசினர்.

ராதாரவி பேசியதாவது:- இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.
அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சத்யராஜ் பேசிய தாவது:- அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை- உடல் தோண்டி எடுப்பு


.



மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவரது மனைவி சிரின் பாத்திமா. இவர்களது மகன் காதர் யூசுப் (வயது 1 1/2) சில தினங்களுக்கு முன்பு கவுஸ்பாட்சா விபத்தில் இறந்து விட்டார்.

கணவனை இழந்த சிரின் பாத்திமா மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தர்காவுக்கு குழந்தையுடன் வந்து தங்கி இருந்தார்.

அந்த தர்காவில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணத்தை சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திர வாதிதனது மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது சிரின் பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு மந்திரவாதி அவருக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்தார்.

குழந்தை காதர் யூசுப்பை கொன்று ரத்தத்தை குடித்து விட்டால் தனது மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார். காதர் யூசுப்பை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

தர்காவில் அனை வரும் தூங்கி கொண் டிருக்கும்போது அப்துல் கபூரும், ரமலா பீவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்று விட்டனர். மறுநாள் காலையில் சிரின் பாத்திமா தனது குழந்தை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அப்துல் கபூர், அவரது மனைவி ரமலா பீவி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

காயல்பட்டிணம் சென்ற போலீசார் அப்துல் கபூரை யும், ரமலாபீவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந் தையை கொன்று நரபலி கொடுத் ததாக தெரிவித்தனர்.

குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்தால் மந்திர சக்தி அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த கொலையை செய்து விட்டதாக அப்துல்கபூர் போலீசாரிடம் தெரிவித்தார்.

குழந்தையை கடத்தி ஏரல் பகுதிக்கு சென்ற அவர்கள் குழந் தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து பெரிய தூக்கு வாளியில் அடைத்து உள்ளனர்.

குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத் தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டிணம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அப்துல்கபூர் அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்து விட்டு தலையை கல்லா மொழி கடற்கரையில் புதைத்துள்ளார்.

உடல் பாகங்களை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் கொண்டு வந்து புதைத்தார். போலீசார் குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல் கபூரையும், ரமலா பீவியையும் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். போலீசார் தலையை தோண்டி எடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஏர்வாடிக்கு வந்து உடலை தோண்டி எடுக்கிறார்கள்.

அப்துல்கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது நட வடிக்கைகள் பிடிக்காமல் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்த ரமலா பீவியுடன் அப்துல்கபூருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது மனைவியாக்கி கொண்டார். இவர்கள் தர்காவுக்கு சென்று மொட்டை போட்டு மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

108 வயது பாட்டிக்குக் குழந்தை ஆசை!

undefined
மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

வயதான ஆண்கள், இளம்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23ஆவது திருமணம். கணவர் முகமது நூர் சே மூசா.

இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார்.

மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்தில் உள்ள தம்பதியினர், ஏதாவது ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

வூக் குந்தர் பணம் படைத்தவரல்லர். வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைதான் முகமது நூருக்கு உள்ளது.

இந்த நிலையிலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நினைக்கிறாரே? ஆனால் பாவம் 108 வயதான அவரது மனைவியால் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்க முடியுமா?
மேலும் இங்கே தொடர்க...

. நாளை 2-வது டெஸ்ட்: இந்தியா பதிலடி கொடுக்குமா?





டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் மோசமாக தோற்றதால் 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. அதோடு தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.

உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி “பாலோஆன்” ஆகி தோற்றது மிகவும் மோசமானது.

ஷேவாக் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் தெண்டுல்கர், லட்சுமண் போராடினார்கள். டிராவிட் நிலைத்து நின்று ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

ஜாகீர்கான், ஸ்ரீசந்த் இல்லாததால் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக காணப்படுகிறது. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பந்துவீச்சை சரிகட்ட பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முரளீதரன் 800 விக்கெட் கைப்பற்றியதோடு ஓய்வு பெற்றார். இதேபோல் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீரரான மலிங்கா காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அஜந்தா மெண்டீஸ் சவாலாக இருப்பார். பேட்ஸ்மேன்களில் சங்ககரா, பரணவிதனா, தில்சான், ஜெயவர்த்தனே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த டெஸ்டிலும் வெற்றி பெற இலங்கை முயற்சிக்கும்.

இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி டென்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இஷாந்த்சர்மா, அபிமன்யூ மிதுன், ஒஜா, சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா, முரளிவிஜய், முனாப்பட்டேல்.

இலங்கை: சங்ககரா (கேப்டன்) தில்சான், பரண விதனா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், சமரவீரா, பிரசன்னா ஜெயவர்த்தனே, மெண்டீஸ், பெர்னாண்டோ, வெலுகேந்திரா, ஹெராத், கண்டாம்பி, தமிகா பிரசாத், ரந்தீவ் திரிபானே நுவன் பிரதீப்.

34-வது முறையாக நாளை மோதல்
இரு அணிகளும் நாளை மோதுவது 34-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 33 டெஸ்டில் இந்தியா 12 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றன. 14 டெஸ்ட் “டிரா” ஆனது.
மேலும் இங்கே தொடர்க...

24 ஜூலை, 2010

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம்: ருத்திரகுமாரன்

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.


இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. இது முடிந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இலங்கையின் தமிழ் இன அழிப்பு எண்ணம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பின்னர் ஏராளமான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். இலங்கையில் தமிழீழத்தை அமைத்தல், இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யவேண்டும், அவர்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்வையிட அனுமதிக்கவேண்டும், அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னாட்டுத் தலைவர்களிடம் வைக்கவுள்ளோம்.

இலங்கை அரசின் இன ஒழிப்புக்கு எதிராக நீதி கோரும் வகையில் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகளுக்கு நிதி: கண்காணிக்க இந்தியா-அமெரிக்கா உடன்பாடு

undefined
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயலாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க உடன்பாட்டில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத
புது தில்லி, ஜூலை 23: மனித சமுதாயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதை கண்காணித்து, அதைத் தடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை

(ஜூலை 23) முக்கியமான உடன்பாட்டை செய்துகொண்டுள்ளன.

2009 நவம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றிருந்த போது பயங்கரவாதம் குறித்து அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராட உடன்பாட்டை செய்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, தற்போது இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரும், இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையும் கையெழுத்திட்டனர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

""இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இப்போது செய்து கொண்டுள்ள உடன்பாடு அமெரிக்காவையும், இந்தியாவையும் மேலும் நெருக்கமடையச் செய்யும். பயங்கரவாதத்துக்கு எதிராக அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரு நாடுகளும் இணைந்தே ஒழித்துக்கட்டும் என்ற தகவலை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள இந்த உடன்பாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:

பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை தீவிரமாகக் கண்காணித்தல், குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் இணைந்து விசாரித்தல், சைபர் கிரைம் தொடர்பாக தகவலை பகிர்ந்து கொள்ளுதல், எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கையாள வேண்டிய உத்திகள், புலனாய்வு நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளுதல், தடயவியல் துறையில் ஒத்துழைப்பு, ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயலாற்றல், எல்லையோரப் பாதுகாப்புப் படை, கடற்படையை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பு, துறைமுகப் பாதுகாப்பை திறன்பட கையாளும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு கூட்டாகச் சிறப்புப் பயிற்சி அளித்தல், உளவுத் தகவலை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை அந்த உடன்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புவாய்ந்த இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள இந்நாள் (ஜூலை 23) இரு நாடுகளுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதை நினைத்து இரு நாட்டு மக்களும் பெருமையடைய வேண்டும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் குறிப்பிட்டார்.

இந்த உடன்பாடு குறித்து கூறிய இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, பயங்கரவாதம் என்பது உலக சமுதாயத்தை அச்சுறுத்தும் பொதுவான விஷயம். இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்கெனவே இணைந்து பாடுபட்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையே எந்த அளவுக்கு ஒத்துழைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு அமைந்துள்ளது என்றார்.

அமெரிக்கா நெருக்குதல் அளிக்கும்... மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா ஏற்கெனவே அளித்துவிட்டது. எனினும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளிக்க வழி ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டியை குலைக்க சதி?

சண்டீகர், ஜூலை 23: காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் தில்லியில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸக்ஷ்ர் எச்சரித்துள்ளனர்.

தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி துவங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

15 கிலோ ஆர்.டி.எக்ஸ். கடத்தல்: இந் நிலையில், பாகிஸ்தானை புகலிடமாகக் கொண்டு செயல்படும் "காலிஸ்தான் ஜிந்தாபாத் படை' என்ற பயங்கரவாத அமைப்பு காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்க தில்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக பஞ்சாப் மாநில உளவுத் துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐ ஆதரவுடன் ரஞ்சித் சிங் நீதா என்பவன் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தில்லியில் ஊடுருவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்காக 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் வழியாக தில்லி கடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெருமளவு வெடிமருந்துகளை பஞ்சாப் போலீஸக்ஷ்ர் கைப்பற்றியுள்ளனர். பெரோஸ்பூர் மாவட்டம், லோரா நவாப் கிராமத்தில் சூரத் சிங் என்பவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து 3 பகுதிகளாக தில்லிக்கு வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகவும், அதில் முதல் பகுதி தனக்கு அனுப்பப்பட்டதாகவும் சூரத் சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இரண்டாம் பகுதி நவான்ஷெர் பகுதியில் உள்ள ஒருவருக்கும், மூன்றாம் பகுதி ஹரியாணா மாநிலம், சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதி வெடிமருந்து மூலம், தேரா சச்சா பிரிவுத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

4 தீவிரவாதிகள்: இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராகி வரும் பயங்கரவாதிகள் பெயர் விவரங்களையும் உளவுத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வீந்தர் சிங், பிரான்ûஸச் சேர்ந்த ஜாஸி, அமெரிக்காவைச் சேர்ந்த ராணா மற்றும் பம்மா ஆகியோர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தில்லிக்குள் ஊடுருவ முடியாவிட்டால், காலிஸ்தான் ஜிந்தாபாத் படைத் தலைவர் ரஞ்சித் சிங் நீதாவே இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் பஞ்சாப் உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...