26 ஜூலை, 2010

போலி சாரதி அனுமதிப் பத்திரம் பயன்படுத்தியவர் மன்னாரில் கைது





மன்னாரில் போலி சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்து வாகனங்களை செலுத்திய நபரொருவர் இன்று மாலை வீதி சேவை போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய மேற்படி நபரின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் பரிசோதனை செய்தவேளை போலி அனுபத்திரம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நாளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி பி.ஐ தில்ருக் பெரேரா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக