19 மார்ச், 2010

புதிய பாதை புதிய சிந்தனை


நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங் களில் வாழும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய வர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், கட்சியின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒப்புவிக்கும் பழைய பல்லவியினால் வழிநடத்தப்படுவதா அல்லது புதிய சிந்தனைக்கு இடமளிப்பதா என்பதையிட்டு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமையின் வழிவந்த வர்களே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். முதலாவது பாராளுமன்ற காலத்திலேயே பேசுபொருளாக இருந்த இனப் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாதிருப்ப தற்கான பொறுப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சார்பிலும் முன்னைய தலைவர்களின் சார்பிலும் ஏற்றாக வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி சமஷ்டிக் கோரிக்கை யுடன் ஆரம்பமாகியது. சமஷ்டிக் கோரிக்கையை வென் றெடுப்பது சாத்தியமில்லை என்ற நிலை இப்போது உரு வாகியிருக்கின்றது. அது மாத்திரமன்றி, இனத்துவ மற்றும் அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரையில் பல பின் னடைவுகளைத் தமிழ் மக்கள் இப்போது சந்தித்திருக்கின் றார்கள். இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் காலத்துக்குக் காலம் விட்ட தவறுகளே இந்த நிலை மைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. முழுமையான அரசியல் தீர்வுக்காக, கிடைத்த தீர்வுகள் எல்லாவற்றையும் இவர்கள் நிராகரித்ததன் துர்ப் பலனையே தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள். இவர்களின் இராஜதந்திரமற்ற அணுகுமுறை கையில் கிடைத்த தோண்டியைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தவனின் கதை போல் ஆகிவிட்டது. இத்தலைவர்கள் இதுவரை பின்பற்றிய அரசியல் பாதை தோற்றுவிட்டதைக் கண்கூடாகக் காண்கிறோம். இப்போது தேவையானது புதிய பாதை. புதிய சிந்தனை.

இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை உடனடி யாக அடைவது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. படிப்படி யாகத் தீர்வை அணுகிச் செல்லும் நடைமுறையே இப் போது பலனளிக்கக் கூடியது. இந்த நடைமுறையைப் பின் பற்றுவதன் மூலம் தமிழ் மக்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைப்பதோடு காலப்போக்கில் முழுமையான அரசியல் தீர்வை அடையக் கூடியதாகவுள்ள அதே வேளை இறுதித் தீர்வுக்குத் தடை யாகவுள்ள பேரினவாத சக்திகளை பலவீனப்படுத்தவும் முடியும். இதுவே நடைமுறைச் சாத்தியமான தீர்வுமார்க்கம்.

சமகால யதார்த்தத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை மாத்திரம் வலியுறுத்திக் கொண்டிருப்பது விமோசனத்தைப் பெற்றுத் தராதது மாத்திரமன்றி, மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்வதற்கும் வழிவகுக்கும். எனவே நடை முறைச் சாத்தியமான வழியில் தீர்வை அணுகிச் செல்வதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ள தலை மையே தமிழ் மக்களின் இன்றைய நிலையில் அவசிய மானது.

பிரச்சினையின் தீர்வுக்குப் பொருத்தமானதும் சாத்தியமானது மான கொள்கையைக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. அக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடிய செயல்பாடும் தேவை. பதவியிலுள்ள அரசாங்கத்துடனான இணக்க அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமே தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுக்க முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக் கும் என்பது கள நிலைமைகளிலிருந்து தெரிகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய முடிவுக்கு வருவதற்கு முன் மேலே குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்து நிதானமாகச் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை வருட இறுதிக்குள் 3 இலட்சம் கன்றுகள் விநியோகம்:


22ம் திகதி ஆரம்ப வைபவம்; அமைச்சர் தி. மு. அதிதி
யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும்.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட வுள்ளார்.

தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

435 கிலோ எடை கொண்ட பரல் குண்டுகள் கண்டுபிடிப்பு புளியங்குளத்தில் அதிரடிப் படையினரால் மீட்பு


புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடை கொண்ட பெரல் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

45 கலன் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரல்களில் தயாரிக்கப்பட்ட இவ்வெடி குண்டுகள் இரண்டும் புளியங்குளம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டன.

முதலாவது குண்டு ரி. என். ரி. வெடிபொருட்கள், இரும்பு துண்டுகள், இரும்பு குண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 261 கிலோ எடை கொண்டது என்றும் இரண்டாவது குண்டும் இதே போன்று ரி. என். ரி. வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 174 கிலோ எடை கொண்டவையாகவும் இருந்தன என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின் றனர்.

இக்குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் 360 பாகைக்கு வெடித்துச் சிதறுவதுடன் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளுடன் ஜொனி பட்டா என்றழைக்கப்படும் 10 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பணியகத்தில் பதிவு செய்தால் ரூ. ஒரு இலட்சம் என்பது வதந்தி எச்சரிக்கையுடன் இருக்க கோருகிறார் கிங்ஸ்லி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று நாடு திரும்பியவர்கள் பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொண்டால் ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளவர்களின் பங்களிப்பையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பணியகம் அவர்களது தரவுகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அவர்கள் சென்ற நாடு தொழில், பெற்ற சம்பளம், அனுபவம் உட்பட அனைத்து தரவுகளையும் பணியகத்துக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது தொழில் அனுபவம் குறித்து இலங்கையில் தனியார் துறையில் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது பற்றியும் பணியகம் ஆராயவுள்ளது.

நாட்டிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகங்களில் தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று தரவுகளை வழங்குமாறும் பிரதேச செயலகங்களினூடாகவும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் 38 ஆயிரம் கிராமங்களில் முழுமையான அபிவிருத்திப் பணிகள் வறுமை நிலை 24 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைப்பு


50 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்பு
திரியபியச வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 14,000 வீடுகள்நாடு முழுவதிலுமுள்ள பதினான்காயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளும் 38 ஆயிரம் கிராமங்களும் உள்ளடங்கும் வகையில் முழுமையான பாரிய அபிவிருத்திப் பபணிகள் முன்னெடுக்கப்பட் டுள்ளதாக தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறி தெரிவித்தார்.

மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தி சமூக, பொருளாதார, கலை, கலாசாரத் துறைகள் என அனைத்துக் கட்டமைப்பு களையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குமாரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம் 2004ம் ஆண்டு 23.4% ஆகக் காணப்பட்ட வறுமை நிலை தற்போது 15.2% ஆகக் குறைந்துள்ளதாக தேச நிர்மாண அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் குமாரசிறி, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க மற்றும் நாட்டின் ஏழு அபிவிருத்தி வலயங்களினதும் மேலதிகச் செயலாளர்கள், சமுர்த்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கடந்த நான்காண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விளக்கமளி த்தனர்.

அந்த வகையில் 2006ம் ஆண்டு 119 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்ட கமநெகும திட்டம் 2007ல் 14 ஆயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு கொழும்பில் வைத்துத் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது மாவட்டங்களில், கிராமங்களிலிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு திட்டம் வகுத்துச் செயற்படுத்தப்படுகிறது.

பிகமநெகுமபீ திட்டத்தின் கீழ் ஒன்பதாயிரம் கிலோ மீற்றர் பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. 43 ஆயிரம் கிலோ மீற்றர் பாதைகள் கொங்கிஹட் போடப்பட்டுள்ளன. அதேபோன்று வடக்கின் வசந்தம், கிழக்கில் உதயம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. கிழக்கு மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. கிழக்குக்குச் செல்லும் சகல பாதைகளும் பிகாபட்பீ போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. சகல படகுப் பாதைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பயிர்ச் செய்கை பண்ணப்படாமல் இருந்த 150,000 ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.

மீள் குடியேற்றம்

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மார்ச் மாத இறுதிக்குள் மீளக்குடியமர எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் காரணமாக சிலவேளை தாமதமாகலாம். எவ்வாறெனினும் மே மாதமளவில் நிறைவு செய்துவிட முடியும். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 1800 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 29 இயந்திரங்கள் அவசரமாக விமானத்தில் தருவிக்கப்பட்டன. கண்ணி வெடிகளை அகற்றுவதில் குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்ததாக விவசாய நிலங்கள் எனத் துரிதமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடமைப்புத் திட்டம்

பிதிரிய பியசபீ வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட் டுள்ளன. படைவீரர்களின் குடும்பங்களுக்கென கடந்த ஆண்டில் 1040 வீடுகள் அமைக் கப்பட்டுள்ளன. விவசாயப் பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களைப் படிப்படியாக இணையத்தளத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி

பெருந்தோட்ட அபிவிருத்தி வலயத்தில் 14 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களின் பிலயத்துபீ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய அபிவிருத்தியில் மலையகத்தை உள்வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெற்றியைவிட வன்னி மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் இலக்கு-எ.சி.கைலேஸ்வர்ராஜா!





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளரான கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமது கட்சியினது வெற்றியைப் பற்றியோ அல்லது தனது வெற்றியை இலக்காக வைத்தோ இத்தேர்தலில் களம் இறங்கவில்லை என்றும்இ கடந்த போராட்ட காலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்து துயருறும் எம் உறவுகளுக்கு தேர்தலில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விக்கு அப்பால் சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பதேயன்றி கட்சியின் வெற்றியை இலக்கு வைத்தோ அல்லது தனது நாடாளுமன்றக் கதிரையை இலக்கு வைத்தோ இத்தேர்தலில் களமிறங்கவில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடியபோது தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் மன்னாருக்கு விஜயம்




எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் (சிவசம்பு), மாதர் சங்கத் தலைவி இந்திரா என்கிற வரோனிகா மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளடங்கலாக நேற்றையதினம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது பெரியமடுப் பகுதியிலுள்ள ஈச்சலவக்க தமிழ் கிராமத்திற்கும் இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது வாமதேவபுரம், கண்ணாட்டி(அடம்பன்) ஆகிய மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்த புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். இதன்போது கருத்துரைத்த மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், தாம் அண்மையில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமக்கு நிவாரண உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லையென்றும், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளை விடுவித்துத் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், தாம் தமது தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போக்குவரத்துக்கான ஒழுங்குகளை செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அது தவிர தாம் மிகவும் குறுகிய பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை அண்மித்துள்ள பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றும் பணிகள் நிறைவுறாத நிலையில் தாம் வெளியிடங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனைக் கேட்டறிந்துகொண்ட புளொட் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வழிவகை செய்வதாக தெரிவித்துள்ளனர். அத்துட்ன புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஈச்சலவக்க தமிழ்க் கிராமத்திற்கு சென்றிருந்த சமயம் அம்மக்கள் தமது நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், முஸ்லிம் மக்கள் சிலர் அப்பகுதிக்கு வந்து இது தமக்குச் சொந்தமான இடமென்றும், நீங்கள் இங்கிருக்க முடியாதென்றும் தம்மை அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவிடயமாக கூடுதல் கனவம் செலுத்தி உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக புளொட் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியாவை மிரட்டும் புயல்: கப்பல்கள் நிறுத்தம்






ஆஸ்திரேலியாவில் டார்லிம்பிள் வளைகுடா பகுதியில் கடுமையான புயல் கிளம்பியுள்ளது. இது மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஆஸ்திரேலியாவின் டார்லிம்பிள் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கப்பல்கள் மூலம் அதிக அளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடலில் கடுமையான காற்று வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கரும்பு தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத னால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சரத்தின் ஆட்கொணர்வு மனு : விசாரணையிலிருந்து விலகினார் நீதியரசர் ஒருவர்





ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒரு நீதியரசர் இன்று விலகிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியசர் சத்யா ஹெட்டிகே, நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, என்.லேகம்வசம் ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்தருணத்தில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணயிலிருந்து தாம் ஒதுங்குவதாக நீதியரசர் என்.லேகம்வசம் தெரிவித்தார்.

இதன்படி இம்மனு தொடர்பான விசாரணை இம்மாம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பலருக்கு எதிராக இம்மனுவை ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்திருந்தார்.

தனது கணவர் பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவத்தினரால் பலவந்தாகக் கடத்தப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படாமல் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் அவர் குற்றஞ் சாட்டியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல்





யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.

குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....!

தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.

அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்.
மேலும் இங்கே தொடர்க...