4 ஜூலை, 2010

மட்டு.செஞ்சிலுவை சங்க கிளை புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை புதிய உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் இன்று சத்தியப்பிரமாண வைபவமும் இடம் பெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய உபதலைவர் சுனில் திசாநாயக்கா பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது செயற்பாட்டை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகப் பொலிஸ் நிலையத்துக்குப் பலத்த சேதமேற்பட்டது. இதனையடுத்து அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில், போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அவர் திடீரென பொலிஸ் நிலையத்தின்ஜன்னல் கண்ணாடி மீது பலமாக அடித்ததன் காரணமாக அவரது கையில் காயமேற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்..

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட நபர், பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்ற யூகத்தின் அடிப்படையில் ஆத்திரமடைந்த மக்கள் பொலிச்நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது-ஆஸி பிரதமர்

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்: 91 வயது பெண்ணின் காலை வெட்டினார்கள்

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்:     91 வயது பெண்ணின்    காலை வெட்டினார்கள்
ஆஸ்திரியா நாட்டின் மேற்கு மாகாணமான திரோல் நகரில் செயின்ட் ஜோகன் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற 91 வயது பெண் வந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த ஒரு காலை மட்டும் ஆபரேஷன் மூலம் வெட்டி அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு அவர் சம்மதித்தார்.

இதைதொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 16-ந்தேதி ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது நோய் பாதித்த காலுக்கு பதிலாக நல்ல நிலையில் இருந்த காலை வெட்டி டாக்டர்கள் அகற்றினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபரேசன் நடத்தப்பட்டது.

அப்போது, நோய் பாதித்த கால் அகற்றப்பட்டது. டாக்டர்களின் தவறான ஆபரேசனின் மூலம் தற்போது அப்பெண் 2 கால்களையும் இழந்து தவிக்கிறார்.

நடந்த சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் ஏற்பட்ட குளறுபடியால் இது போன்ற தவறு நடந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த தவறுக்கு காரணமான டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இது போன்ற தவறுகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த 2005-ம் ஆண்டு டாக்டர்களால் தவறானமருந்து கொடுக்கப்பட்ட ஒரு நபர் இறந்தார்
மேலும் இங்கே தொடர்க...

கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.






கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. அதில் இருந்த பெட்ரோல் முழுவதும் சாலையில் ஆறாக ஓடியது. சுற்றிலும் நெருக்கமான குடியிருப்பு பகுதிகள்.


பெட்ரோல் வீணாவதை அறிந்ததும் கையில் பாத்திரங்களுடன் மக்கள் நெருக்கியடித்து ஓடி வந்தனர். பெட்ரோலை பிடிக்க முயன்ற னர். அப்போது திடீரென டாங்கர் வெடித்து சாலையில் பரவிய பெட்ரோல் தீப்பற்றியது. இதானால் . டாங்கரை முற்றுகையிட்டிருந்த மக்கள் தீயில் கருகினர். இந்த கோர விபத்தில் 200 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய நீராவி கப்பல்: மீனவர்கள் வீசிய வலையால் வெளியுலகிற்கு தெரிந்தது





ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர்; 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளுக்கு பின், டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அவை டைட்டானிக் கப்பலின் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.

இதேபோல், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியில் மூழ்கிப்போன ஒரு நீராவிக் கப்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, மில்வாகி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 1991ம் ஆண்டு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 300 அடி ஆழத்தில் ஒரு மர்மமான பொருளில் அவர்களின் வலை சிக்கியது. இது, பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ஏதாவது ஒரு கப்பலின் பாகங்களாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மில்வாகிக்கு தெற்கே 40 மைல் தொலைவில், கடந்த 20 ஆண்டுகளாக மெக்சிகன் ஏரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். ஆழ்கடலில் ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிகப்பெரிய நீராவிக் கப்பலான எல்.ஆர்.டோடி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சிக்கி நீரில் மூழ்கிய சம்பவம் மீண்டும் வெளி உலகிற்கு தெரியவந்தது.

ஜிட்கா ஹனகோவா தலைமையில் நீரில் மூழ்கும் குழுவிடம் இந்த நீராவிக் கப்பல் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன கப்பல்களில் மிகப்பெரியது இது என இக்குழுவினர் கண்டுபிடித்தனர். மெக்சிகன் ஏரியின் அடியில் களிமண் சேற்றில் கப்பல் செங்குத்தாக சிக்கியிருந்த போதிலும் சேதமடையாமல் இருந்தது. மெக்சிகன் ஏரி நன்னீர் ஏரி என்பதாலும், அதன் அடியில் உள்ள நீர் குளிர்ச்சியாக இருந்ததாலும் டோடி கப்பல் சேதமடையாமல், நல்ல நிலையிலேயே இருந்தது. மேலும், கப்பலின் பாய்லர் ரூமில் இருந்த உடல்களும், அழுகிப் போகாமல் நல்ல நிலையில் இருந்தன. 20 அடி உயரம் உள்ள கப்பலின் உள்ளே, புயலின் போது 30 அடி உயரத்திற்கு அலை எழும்பி பல டன் எடையுள்ள நீர் கப்பலில் கொட்டியதால் கப்பல் மூழ்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட மூழ்கிய கப்பல்களை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வாளர் பிரன்டான் பெய்லாட் கூறுகையில், "1898ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெக்சிகன் ஏரியில் தெற்கு சிகாகோவில் இருந்து ஒன்டாரியோவிற்கு மக்காச்சோளம் சரக்குகளை ஏற்றிக் கொண்டு எல்.ஆர்.டோடி நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பயங்கர புயல் காற்று வீசியது. பனியும், ஆலங்கட்டி மழையும் தொடர்ந்து பெய்தன. 30 அடி உயரத்திற்கு அலை தோன்றி கப்பலை தாக்கியது. இதில் 300 அடி நீளமுள்ள நீராவிக் கப்பல் நீரில் மூழ்கியது. அந்த நேரத்தில் இரண்டு பாய்மரக்கப்பல்களை கொண்டு இழுத்து நிறுத்த முயற்சி செய்தும் அது நிறைவேறவில்லை. நீராவிக் கப்பலில் பயணம் செய்த 17 பேரும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

புயல் காற்று ஏற்படும் போது கப்பலை திசை திருப்ப உதவும் சுக்கான் உடைந்து போனால் கப்பல் தள்ளாடி மூழ்கி விடும். இதனால் கப்பலில் உள்ளவர்கள் இறந்து விடுவர். தற்போது விஸ்கோசின் மாநிலத்திற்கு சொந்தமான எல்.ஆர். டோடி கப்பலை வெளியே எடுக்கும் எண்ணமில்லை. நூறு ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருக்கும் இக்கப்பலை இனியும் நல்ல முறையில் பாதுகாப்பது கடினம். இயற்கையாகவே இன்னும் சில ஆண்டுகளில் கப்பல் சேதமாகிவிடும். மூழ்கிப்போன டோடி நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், 100 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட எங்களது கலாசார வரலாறு தெரிந்து கொள்ள முடிகிறது' என்கிறார். புயல் காற்று, கப்பலில் ஓட்டை உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஆயிரக்கணக்கான கப்பல்கள் பெரிய ஏரிகளில் மூழ்கியுள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் மெக்சிகன் ஏரியில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

3 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகளிடையேயான இன்றைய சந்திப்பு தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து




தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுகாலை இரண்டாவது தடவையாக கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. அத்துடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கூடுவதென்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா), தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீ ரெலோ ஆகிய கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தன. இக்கலந்துரையாடல் தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் பல தமிழ்க் கட்சிகள் கூடி கலந்துரையாடினோம். இதில் கலந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நானும் சிவாஜிலிங்கம் அவர்களும் கதைத்தபோது இரா.சம்பந்தன் அவர்கள் மறுப்புக் கூறவில்லை. தன்னுடைய கட்சியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு கூறுவதாக தெரிவித்தார். இது மிகவும் சிறந்ததொரு ஆரம்பமாகவே நான் பார்க்கின்றேன். நிச்சயமாக இதுவொரு தேர்தலுக்கான கூட்டு அல்ல. சில வேளைகளில் தேர்தல்களில் கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது வேறு கூட்டுகளில் இருந்தோ கேட்கலாம். இது ஒரு அரங்கம் என்றவாறே நாம் கூறமுடியும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துபேசி ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டுவர வேண்டுமென்கிற ஆர்வத்தை இங்கு கலந்து கொண்டிருந்த ஒவ்வொருவரிடையேயும் என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் புளொட் தலைவர் பதிலளித்துள்ளார்.

கேள்வி: இனப்பிரச்சினை தொடர்பாக இந்தக் கட்சிகளின் மத்தியில் ஏதேனும் பேசப்பட்டதா?

பதில்: அடிப்படையிலேயே இதுபற்றி எதுவுமே இன்று பேசப்படவில்லை. அதாவது நாங்கள் அனைவருமே கட்சிகளை ஒன்றுபடுத்திக் கொண்டுவர வேண்டுமென்பதிலேதான் ஆர்வமாக இருந்தோம். அதைவிட உடனடிப் பிரச்சினைகள், உதாரணமாக உயர்பாதுகாப்பு வலயம் அல்லது மக்கள் குடியேற்றப்படாமை இவை சம்பந்தமாக எங்களுடைய ஆட்சேபத்தை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால் அடுத்த கூட்டத்திலேதான் இவ்விடயத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்.

கேள்வி: இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரியவகையில் அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்: நானும் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் திரு சம்பந்தன் அவர்களுடன் கதைத்திருந்தோம். அவர் அது தொடர்பில் ஆர்வமாகவும், ஆதரவாகவுமே கதைத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அவர்களை மீண்டும் மீண்டும் கலந்து கொள்வதற்கு கேட்பதற்கும் யோசித்துள்ளோம். நிச்சயமாக அவர்களும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாகுமென்றே நினைக்கின்றேன்.

கேள்வி: இந்தக் கட்சிகள் ஒன்று கூடியதற்கும் தேர்தல்களுக்கும் ஏதேனும் தொடர்புகளுண்டா?

பதில்: இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் வருகின்றபோது தேர்தல் கூட்டுக்கள் எவ்வாறு மாறும் எவ்வாறு இருக்குமென்பதைப் பற்றி தற்போது கூறமுடியாதிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உங்களுடைய கட்சி போட்டியிடுமாக இருந்தால் எவ்வாறான முடிவினை எதிர்பார்க்கிறீர்கள்:

பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தல் போலல்லாமல் இம்முறை கவனமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து ஒரு கணிசமான அங்கத்துவத்தை பெற வேண்டுமென்ற ஆர்வமிருக்கிறது. அதற்காக தனித்துப் போட்டியிடுவோமென்று நான் கூறவரவில்லை. எப்படியும் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவந்து போட்டியிடுவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமென்று நான் கருதுகிறேன்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கம் தற்போது வெளிப்படுகிறதா?

பதில்: அது ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற நிலைமைக்குப் போகக் கூடாது. ஜனநாயகம் இருக்கவேண்டும். சில விடயங்கள் தொடர்பாக கருத்தொற்றுமை இருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய விடயமாக இருக்கும். முக்கியமாக அரசியல்தீர்வு சம்பந்தமாகவும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனை அணுகுவது சம்பந்தமாகவும் ஒத்தகருத்துகள் இருக்குமென்றால் அது ஒரு மிகப்பெரிய விடயமே.

கேள்வி: தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறான நிலையேற்படும்போது தமிழ்க் கட்சிகளுடைய வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: அரசாங்கத்திற்கு உள்ளேயே அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் உருவாகிக் கொண்டு வருகின்ற காரணத்தினால் விரைவில் தேர்தல் முறைகள் மாற்றப்படுமென்று நான் நம்பவில்லை. தேர்தல் முறைமைகள் மாற்றப்பட்ட பின்புதான் நாங்கள் அது பற்றி தீவிரமாக ஆராயமுடியும்.
மேலும் இங்கே தொடர்க...

சூரிச் மாநகரில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்









தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். இந்தவகையில் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00மணியளவில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, அஞ்சலிக் கூட்டம் என்பன இடம்பெறவுள்ளன. இக்கூட்டத்தில் கழகத் தோழர்கள், தோழமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளும் இடம்பெறவுள்ளன. மற்றும் விநோதவுடைப் போட்டி, சிறுவர்களின் நாட்டியம், நாடகம், இசைநிகழ்ச்சிகள், பாட்டுக்கேற்ற அபிநயம், நகைச்சுவைக் கதம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன், இதில் பங்கேற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைத்துத் தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு






தூத்துக்குடி துறைமுகத் தில் ரூ. 18கோடி மதிப்புள்ள 4 திட்டப்பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் மோகன்தாஸ் நேற்று தூத்துக்குடி வந்தார். திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி- கொழும்பு இடையே முதல்கட்டமாகவும், ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே 2-வது கட்டமாகவும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் கப்பல் போக்கு வரத்தை அரசே நடத்தும் திட்டம் எதுவுமில்லை. தனியார் கப்பல் நிறுவனங்கள்தான் இந்த பயணிகள் கப்பலை இயக்கும் இந்த திட்டத்தில் பயணிகள் விசா இல்லாமல் சென்று வரலாமா? அல்லது பயணம் செய்ய விசா வேண்டுமா? என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்,

சேது சமுத்திர திட்டத்தில் தற்போது எந்தவித முன்னேற்றமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்ப தால் எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறை வேற்றுவது தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

78 வயதில் ஆண் குழந்தைக்கு தந்தை ஆன முதியவர்

78 வயதில் ஆண் குழந்தைக்கு தந்தை ஆன முதியவர்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ரேமண்ட் கல்வெர்ட் (78), இவர் தன்னைவிட 54 வயது இளையவரான சார்லோட் (25) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கடந்த 10 வாரங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரேமண்ட் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த தள்ளாத வயதிலும் ஒரு குழந்தைக்கு தந்தையான சந்தோஷ வெள்ளத்தில் ரேமண்ட் திளைக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள நானும் எனது மனைவியும் திட்டமிட்டோம்.அதற்காக நான் வயாகரா மாத்திரையையோ அல்லது வேறு ஊக்க மருந்துகளையோ பயன்படுத்தவில்லை என்றார்.

குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த பின் நாங்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவில்லை என வெட்கம் கலந்த புன்கையுடன் அவரது மனைவி சார்லோட் தெரிவித்தார்.அதற்கு முன்பு 76 வயது முதியவரான டென்னிஸ் இலாம் எனபவர் தனது மனைவி கோரா மூலம் கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பெற்று உலக சாதனை படைத்து இருந்தார். அந்த சாதனையை ரேமண்ட் கல்வெர்ட் முறி யடித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...