17 செப்டம்பர், 2009

யாழ். முகாம்களிலுள்ள வெளிமாவட்ட மக்களை வவுனியா அனுப்ப நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வவுனியா முகாம்களுக்கு அனுப்பி வைப்பதென வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரச செயலகத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்திற்கமைய யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 928 குடும்பங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வவுனியா முகாம்களை வந்தடைந்ததன் பின்னர், அங்கிருந்து அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் வவுனியா மெனிக்பாம் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோர் படிப்படியாகப் படையினரால் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் 1000 பேரை இன்று வியாழனன்று அங்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது


அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று - கல்முனை வீதி, சம்மாந்துறை - நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று - பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

16 செப்டம்பர், 2009

தாயகக்குரல் 19

அண்மைக் காலங்களில் ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி கூறும் கருத்து, "இலங்கைஒரே நாடு. இலங்கையர் அனைவரும் ஒரே இனம்" என்பதாகும். இதை ஜனாதிபதிஎன்ன அர்த்தத்தில் கூறுகிறாரோ தெரியாது. முஸ்லிம் தேசிய காங்கிரஸ்மகாநாட்டில் பேசிய ஜனாதிபதி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனவாதஅரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல.
இந்த நாட்டில் இனிமேல் இனப்பிரச்சினை இல்லை. அனைத்து இன மக்களும்இந்த நாட்டு பிரஜைகள் என்ற ரீதியல் சமமானவர்கள் என்று பேசியுள்ளார். இதுதான் அண்மைக் காலங்களில் ஜனாதிபதியின் சிந்தனையாகவெளிவருகின்றது. இது ஒரு பேரினவாதக் கருத்து என்ற எண்ணம் புத்திஜீவிகள்மட்டத்திலே தோன்ற ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதியினது கருத்து குறித்து விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியப்படஒன்றும் இல்லை. இனங்களிடையே ஒருவரை ஒருவர் சந்தேகிக்காமல்சமாதானமாக வாழும் சூழ்நிலை தோன்றிய பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தைகூறியிருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்திருக்கும். அப்படிப்பட்டசூழ்நிலை உருவாக வேண்டுமானால் பெரும்பான்மை இனம் அனுபவிக்கும்அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினத்துக்கும் கிடைக்கும் விதத்தில்அரசியல் அமைப்புமூலம் உறுதிசெய்யப்படவேண்டும்.

இந்த அரசியல் உரிமைகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவேண்டுமேஅன்றி பெரும்பான்மையினர் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்கத்தேவையில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் இனி இனப்பிரச்சினைகிடையாது என ஜே.வி.பி., ஹெலஉருமய போன்ற கட்சிகள் கூறலாம். அவர்கள்கூறுவதை யாரும் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. ஆனால் இனப்பிரச்சினைகிடையாது என்று தேசியக் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணியோஅல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ கூறமுடியாது.

கடந்த காலங்களில் இவர்கள் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதுஇனப்பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு புலிகளுடன்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரவு தலைவர் மங்கள சமரவீரா, எம்.பி. தெரிவித்திருப்பது போன்று புலிகள் அமைப்பானது பிரச்சினைகளின் ஒருபிரதிபலிப்பே தவிர பிரச்சினை அதுவல்ல.

இலங்கைத் தமிழ் மக்கள் தனியான ஒரு இனம் என்பது புலிகளால்ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அதற்கு நீண்டகால வரலாறு உண்டு. இலங்கைத்தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போன்றே நீண்ட வரலாற்றையும், தனியானகலாச்சாரத்தையும், பாரம்பரிய பிரதேசங்களையும் கொண்ட தனி இனம் என்றகோட்பாட்டின் அடிப்படையிலேயே 1949ல் தமிழ் அரசுக்கட்சி தோற்றம் பெற்றது.

இலங்கை ஒரே நாடு, இலங்கையர் அனைவரும் ஒரு இனம் என்ற நிலையில்வாழ சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் அரசியல் ரீதியாகபாதுகாக்கப்படவேண்டும்.

அரசின் பங்காளிக் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக பலவித கருத்துக்களைகொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் அரசாங்கத்தால் சிறுபான்மை இனமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; விதத்தில் ஒரு தீர்வைக் கொண்டுவரமுடியுமா என்பதே மக்கள் மனதில் எழுகின்ற கேள்வியாகும்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து அரசை ஆதரிக்கும் விமல் வீரவம்சாதலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, 13வது திருத்தம் பற்றிஅமைச்சர்கள் வாய் திறக்கக்கூடாது என்று கட்டளை இடுகிறது.
கிறீஸ்தவ, இஸ்லாமிய மதக்குழுக்களை உடனடியாக தடைசெய்யவேண்டும்என ஹெல உருமைய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர்அரசிடம் வலியுறுத்துகிறார்.

சமஷ்டி முறைக்கு இந்த நாட்டில் இடம் இல்லை என்கிற கோஷமும்இடையிடையே அரசு தரப்பிலிருந்து கேட்கிறது.

இனவாதக் கட்சிகளாக தம்மை இனம் காட்டிய கட்சிகள் என்ன கருத்தைவெளியிட்டபோதிலும் சிங்கள மக்களிடையே பலமான ஆதரவை பெற்றிருக்கும்தேசிய கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒருமைப்பட்டால் இனப்பிரச்சினையைசுலபமாக தீர்க்கமுடியும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியோ அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவது என்றுகங்கணம் கட்டி எதிர்கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணி அமைப்பதில்தீவிரமாக உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட 19 அமைப்புகள் உள்ளடங்கலாக எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு இன்னும் ஒருமாதத்துள் நிறுவப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்துக்கட்சிபிரதிநிதிகள் குழுவுடன் இதுவரை காலமும் ஒத்துழைக்காது விமர்சனம் செய்துவந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இனப்பிரச்சினை தீர்வுக்கான தமதுஆலோசனைகளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம்கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அரசாங்கமும் தமதுஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை விடாப்பிடியாக கொண்டிருந்த ஐக்கியதேசியக்கட்சி புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையின்போதுதான் முதல்முறையாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புக்கொண்டது. ஆனால் பின்னர் சமஷ்டி அடிப்படையிலானதீர்வை எந்தக்காலத்திலும் தாம் ஏற்றுக்கொண்டதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்திருந்ததுடன் 13வது திருத்தமே இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு எனத் தெரிவித்தது.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளித்தஆலோசனைகளில் என்ன தீர்வை முன்வைத்துள்ளார்கள்; என்பது தெரியும்வரைரணிலின் தீர்வுத்திட்டம் பற்றி எந்தக் கருத்தும் கூறமுடியாது. அதேபோலஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் என்ன நோக்கம் கொண்டவைஎன்பதையும் வரும் காலம்தான் உணர்த்தமுடியும்.
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா நகரசபை தலைவர் ரி.என்.ஏ சம்பந்தர் தலைமையில் பதவியேற்பு

வவுனியா நகரசபை தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் தலைமையில் பதவியேற்பு. வவுனியா நகரசபை கலாச்சாரமண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பில் வவுனியா நகரசபைக்க தெரிவானகூட்டமைப்பு உறுப்பினர்களும், முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும்பதவியேற்றுக்கொண்டனர்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் தெரிவான இருவரும் மற்றும் புளொட்சார்பாக தெரிவான உறுப்பினர்களும் மேற்படி பதவியேற்பில்பதவியேற்கவில்லை. நகரசபையின் எதிர்க்கட்சி ஸ்தானத்தை பெற்றுள்ளபுளொட் உறுப்பினர்கள் எவரும் இங்கு பதவியேற்கவில்லை.
கடந்த 10ம் திகதி வவுனியா வைரவபுளியங்குளம் புளொட் அலுவலகத்தில்தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமூக சேவையாளருமான வை. தேவராஜா முன்னிலையில் நகரசபைக்கு தெரிவாகியுள்ள புளொட்உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, .பார்த்தீபன் ஆகியோர்பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
யாழ் விளையாட்டு கழகங்களுக்கு வவுனியா நங்கூரம் விளையாட்டு கழகம் கௌரவிப்பு


வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின்ஏற்பாட்டில் 12.09.09 - 13.09.09 இருதினங்கள் நடைபெற்ற சிநேகப+ர்வஉதைபந்தாட்ட போட்டிகளிள் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.



வவுனியா நகரசபை மைதானத்தில்நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் முதல் நாள் 12.09.09 யாழ் பாஸையூர்சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகமும் வவுனியா "அல்அசிரா" விளையாட்டுக்கழகமும் ஆகிய இரு அனிகழூக்குமிடையில் போட்டியில் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 2 கோல்களால் வெற்றிபெற்றது.



தொடர்ந்து 13.09.09 அன்று யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கமூம் "வவுனியா யூனி பைற்" விளையாட்டுக்கழகமும் ஆகியஇரு அனிகழூக்குமிடையிலன போட்டியில் யூனி பைற் விளையாட்டுக்கழகம் 01 கோல்களும் யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 08 கோல்களும் பெற்று வெற்றி பெற்றதுடன் ஆட்டம் நிறைவுபெற்றது.


புளொட் அமைப்பின் நங்கூரம் விளையாட்டுக்கழகம் இவ் சிநேகப+ர்வபோட்டியில் பங்கு பற்றிய யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் உதைபந்தாட்டகுழுவினருக்கு காலையும் மதியமும் இரவும் போசனம் வழங்கி கௌரவித்தனர். வைரவபுளியங்குளம் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்வவுனியா உதைபந்தாட்; சங்க பிரதி நிதிகள் உட்பட லிங்கநாதன் மாவட்டஅரசியள் பொறுப்பாளார் சு.சிவம் நங்கூரம் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்ஆகியோர் கலந்து கோண்டனர்.

மேலும் இங்கே தொடர்க...

12 செப்டம்பர், 2009

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாதென ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து இனிமேல் முதலாளிமார்சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலர் ஆறுமுகன் தொண்டமான்தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாகஉயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற 8வது சுற்றுபேச்சுவார்த்தையும் நேற்று தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 290ரூபாசம்பளத்தை 500ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்துவரும் இதேவேளை, 360ரூபாவாக நாள் சம்பளத்தை அதிகரிக்க முடியும்என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலாளிமார்சம்மேளனத்துடன் தொடர்;ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நேரிடும் எனவும் ஆறுமுகன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ளகூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்துஅறிவிக்கப்படும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

11 செப்டம்பர், 2009

தடுத்து வைத்துள்ள பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் : ஐ.நா. கோரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள தமது நிறுவன பணியாளர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உள்நாட்டு பணியாளர்களைப்பாதுகாப்புப் படையினர் கைது செய்து, தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நிறுவனத்திற்கு அறிவிக்காமலேயே குறித்த பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சார்ள்ஸ்ரவீந்திரன் நவரட்ணம் (45), கந்தசாமி சுந்தரராஜன் (35) ஆகிய ஐக்கிய நாடுகள்அமைப்பு பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மரி ஒகபே தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட வேண்டும், அல்லது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.குற்றச்சாட்டுக்கள்எதுவும் முன்வைக்காது தடுத்து வைத்திருக்கும் நடவடிக்கையானது சர்வதேசசட்டங்களுக்குப் புறம்பானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்ட மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின்சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணசபைஉறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம்இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில்ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ம் ஆண்டுதமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு வெளியேறியவர்கள் மீள்குடியேற்றத்திற்கும், மீண்டும் விவசாயச்செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும்நிலையில் இந்த சட்டவிரோதக்குடியேற்றம் இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்டகாணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறிஅமைக்கப்பட்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது எனவும்இரா.துரைரெத்தினம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

10 செப்டம்பர், 2009

வவுனியா நகரசபையின் புளொட் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்


ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணி(புளொட்)சார்பில் வவுனியாநகரசபை தேர்தலில் போட்டியிட்டுவெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்றுகாலை நகரசபைஉறுப்பினர்களாக பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டுள்ளனர். (10.09.2009)


தமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினரும் தந்தை செல்வா நற்பணிமன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகியஇறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு..பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாகசத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னிமாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர்திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம்ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலிசெலுத்தினர்.
மேலும் இங்கே தொடர்க...
தாயகக்குரல்18



புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஜனாதிபதி கூட்டிய அந்தக் மகாநாட்டில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டதால் அது பலரது கவனத்தையும் கவர்ந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து செயல்படப்போவதாகவும் செப்ரெம்பர் 7ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கப்போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தன. அந்தச் செய்திகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் 7ம் திகதி நடைபெற்றது.
கடந்த காலங்களில் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பது பலரது கவனத்தை கவர்ந்ததில் வியப்பில்லை. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவைகளை அரசு செய்து கொடுக்கவில்லை எனவும் வடக்கில் கிளிநொச்சி பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலையம் உருவாக்கப்பட்டு இராணுவ மயப்படுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்குவதே அரசின் கொள்கை எனவும் குற்றம் சாட்டிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பின்போது பல முக்கிய பிரச்சினைகளுக்கு விடை தேடும் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் காணப்பட்டது.
ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த செய்திகளே 8ம் திகதி தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. பத்திரிகை செய்திகளின்படி இவர்களது சந்திப்பில் புதிய செய்திகள் எதுவும் காணப்படவில்லை. இந்தச் சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுவதானால் புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பது போலத்தான் அண்மைக்காலங்களில் பலராலும் பேசப்பட்ட விடயங்களும் அதற்கான ஜனாதிபதியின் பதிலுமாகவே காணப்பட்டன.. நாம் கடந்த வாரம் தாயகக்குரலில் சுட்டிக்காட்டியிருந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
யாழ் குநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டதால் இடம் பெயர்ந்த மக்கள் பற்றியும் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை மிளக்குடியமர்த்துவது இ பாதுகாப்பு வலயங்களை நீக்குவது குறித்தும் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் அமைச்சருமான கலாநிதி லியம்பொக்ஸ் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. குடாநாட்டில் பாதுகாப்பு வலயத்தால் இடம் பெயர்ந்த மக்கள்; மற்றும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்ட மக்கள் குறித்தும் அப்போது யாழ் அரசாங்க அதிபரால் அந்த குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் போர்முடிந்தாலும் தற்போதைய நிலையில் உடனடியாக வடக்கு கிழக்கில் பாதுகாப்பை தளர்த்தும் சாத்தியம் இல்லையென கூட்டமைப்பிடம் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பதிலிலிருந்து உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் இப்போதைக்கு தீர்க்கப்படும் பிரச்சினையாக காணப்படவில்லை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரை மிளக் குடியமர்த்தும். நடவடிக்கையிலும் நீண்ட அவகாசம் தேவை என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அமைச்சர்கள் மட்டத்தில் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்படுவதாக கூறப்பட்டாலும் வன்னி தவிர்ந்து, திருகோணாமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடங்களாக கொண்டவர்களே இப்போது மீளக்குடியமர்த்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிடுகையில் வன்னியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களில் சிறிய தொகையே மிட்டகப்பட்டுள்ளதாகவும் அவை முற்றாக மீட்டபின்னரே மக்களை மீளக் குடியமர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. எனவே வன்னி மக்களின் மீள்குடியேற்றம் ஜனாதிபதியின் 180 நாள் கால அவகாசத்தை தாண்டியபின்னரும் நடைபெறுமா என்பது சந்தேகமே. நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் எனவும் விசேடமாக நாட்டின் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்மேல் குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய மனமாற்றம் தற்போதைய சூழ்நிலைக்கேற்ற தந்திரோபாயமா அல்லது யதார்த்தத்தை புரிந்து கொண்ட மனமாற்றமா என்ற சந்தேகம் ஏழுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள்தான் அப்படி மக்களை சந்தேகிக்க வைத்துள்ளது. கடந்த காலங்களில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்காத தமிழ் கட்சிகளும்இ நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அரசை பகைக்காமல் இருப்பதாகவே கூறிவந்தன. அப்போது அவர்களை அரசுடன் இணைந்து செயல்படும் ஒட்டுக்குழுக்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்தது.
2001ம் ஆண்டுக்கு முன்னர் வெண்தாமரை இயக்கம் என்ற அமைப்பினூடாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டத்திற்கான நாடளாவிய பிரச்சாரத்தின் காரணமாக தெற்கில் அடங்கிப்போயிருந்த பேரினவாத சக்திகளை மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கு பேரினவாதக் கட்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக அங்கீகரிக்க எடுத்த முடிவுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டை அங்கீகரித்தபோதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினை தொடர்பான அச்சத்தை இனவாதிகளால் தூண்ட முடிந்தது.
தனிநாட்டுக்கான யுத்தம் இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பது தெரிந்ததே. பிராந்திய சுயாட்சி போதாது என்று வாதிட்ட நிலை போய் 13வது திருத்தம் முழுமையாக கிடைக்காதா என்று அங்கலாய்க்கும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள மனமாற்றம் யதார்த்தத்தை பரிந்துகொண்டதான மனமாற்றமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.
மேலும் இங்கே தொடர்க...