17 செப்டம்பர், 2009

யாழ். முகாம்களிலுள்ள வெளிமாவட்ட மக்களை வவுனியா அனுப்ப நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வவுனியா முகாம்களுக்கு அனுப்பி வைப்பதென வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரச செயலகத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்திற்கமைய யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 928 குடும்பங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வவுனியா முகாம்களை வந்தடைந்ததன் பின்னர், அங்கிருந்து அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் வவுனியா மெனிக்பாம் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோர் படிப்படியாகப் படையினரால் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் 1000 பேரை இன்று வியாழனன்று அங்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக