11 செப்டம்பர், 2009

மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்ட மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின்சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணசபைஉறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம்இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில்ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ம் ஆண்டுதமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு வெளியேறியவர்கள் மீள்குடியேற்றத்திற்கும், மீண்டும் விவசாயச்செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும்நிலையில் இந்த சட்டவிரோதக்குடியேற்றம் இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்டகாணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறிஅமைக்கப்பட்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது எனவும்இரா.துரைரெத்தினம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக