10 செப்டம்பர், 2009

வவுனியா நகரசபையின் புளொட் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்


ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணி(புளொட்)சார்பில் வவுனியாநகரசபை தேர்தலில் போட்டியிட்டுவெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்றுகாலை நகரசபைஉறுப்பினர்களாக பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டுள்ளனர். (10.09.2009)


தமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினரும் தந்தை செல்வா நற்பணிமன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகியஇறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு..பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாகசத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னிமாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர்திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம்ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலிசெலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக