5 ஜூன், 2011

இந்திய மீனவர்கள் நால்வருக்கு இலங்கையில் 14 நாள் சிறை

நயினைதீவு கடற்பரப்பில் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய மீன்வளத்துறை சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டதன் பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்பு நீதிமன்றம் அவர்களை 14 நாட்கள் சிறைப்படுத்த உத்தரவிட்டதாகவும் தெரியவ ருகிறது.

இதன்படி இன்று யாழ் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்படும் இவர்கள் ஜூலை 17ஆம் திகதி விடுவிக்கப்படுவர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக