28 ஜனவரி, 2011

2050 உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?





உலகில் அதிகரித்துவரும் சனத்தொகையை ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டுமாயின் உலக நாடுகள் உலக உணவு உற்பத்தி குறித்து அடிப்ப டை மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இல்லையெனில், 2050 ம் ஆண்டில் பசியும், பட்டினியும் தழைத்தோங்கும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் அரசாங் கங்கள் மக்களின் உணவு உட்கொள்ளும் பழக்கத் தில் மாற்றம் செய்ய வேண்டு மென்றும், உணவு விரயமாவதை தடுக்கவும், உணவுக்காக வழங்கும் மானியத்தை குறைக்க வேண்டும் என்றும், குறைந்த அளவில் கூடுதலான போஷாக் குடைய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடையே பிரபல்யப்படுத்த வேண்டும் எனவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விஞ்ஞான விவகார ஆலோசகரான பேராசிரியர் ஜோன் பெடிங்டன் தலைமையிலான குழு தனது, அதிகரித்து வரும் உலக சனத்தொகை பற்றிய தீர்க்க தரிசனம் கூறும் ஆய்வறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் உலகின் சனத்தொகை 9 பில்லியனாக அதிகரிக்குமென்றும் இப்பொழுது இருந்தே இவர்களுக்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்கான நெறியான திட்டங்களை தயாரிக்க தவறினால், உணவு பஞ்சத்தால் உலக நாடுகளில் மக்களிடையே கலவரங்களும், இரத்த கலரியும் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

உலகின் சத்தொகை பெருக்கத்திற்கு ஈடுசெய்யும் முகமாக அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய உணவுத் தானியங்களை விஞ்ஞானிகள் ஆய்வுகளை செய்து தயாரிக்க வேண்டுமென்றும், காலநிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்றும் மேலும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக