28 ஜனவரி, 2011

301 உள்ஃராட்சி சபைகளுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தல்


வேட்புமனுக்கள் ஏற்பு நேற்றுடன் நிறைவு; ஐ.தே.க, ஐ.ம.சு.மு., தமிழரசுக்கட்சி, மு.கா, ஜே.வி.பி உட்பட முக்கிய கட்சிகளின் மனுக்கள் நிராகரிப்பு


301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று அறிவித்தார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. உட்பட பிரதான கட்சிகள் பலவற்றின் கூடுதலான வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வேட்புமனு தொடர்பான இறுதிப் பட்டியல் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை. உத்தியோகபூர்வ இறுதி வேட்புமனுப்பட்டியல் இன்று வெளியாகுமென தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

பிரதான கட்சிகள் மற்றும் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் நேற்றே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தன. வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த 16 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இது தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காலி மாவட்டத்தில் அக்மீமன பிரதேச சபை, இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபை, மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை மற்றும் சியம்பலதுவ பிரதேச சபைகள் குருநாகலை மாவட்டத்தில் பொல்கஹவல பிரதேச சபை, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் பல்லேபொல பிரதேச சபைகள் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச, சபை நுவரெலிய மாவட்டத்தில் லிந்துல- தலவாக்கலை நகர சபை, நுவரெலிய பிரதேச சபைகள் என்பவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

ஐ.தே.க.வின் மனுக்களும் கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகமவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபையிலும் ஐ.தே.க. வின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காலி மாவட்டத்தில் பத்தேகம பிரதேச சபை, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பிரதேச சபை, மட் டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபை என்பவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள தாக அறிய வருகிறது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மாவட்டத்தில் அத்தன கல்ல பிரதேச சபைக்கும் மினுவாங் கொடை நகர சபைக்கும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச சபைக்கும் கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபைக்கும் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள். நிராக ரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டா ரங்கள் கூறின.

ஜே.வி.பி. மாத்தளை மாவட்டத் தில் வில்கமுவ பிரதேச சபை, புத்த ளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய பிரதேச சபை என்பவற்றிற்கு தாக் கல் செய்த வேட்பு மனுக்களும் தமிழ ரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட த்தில் பூநகரி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட் டுள்ளதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின.

பிரஜைகள் முன்னணி, துணுக்காய் பிரதேச சபைக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட செயலக வட்டாரங் கள் கூறின.

இது தவிர நவசமசமாஜ கட்சி, ஜனசெத்த முன்னணி உட்பட மேலும் சில கட்சிகளினதும் பெரும் பாலான சுயேச்சைக் குழுக்களினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப் பட்டதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேமித்து வழக்குத் தொடரப் போவதாக பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.

இம்முறை தேர்தலில் 14, 315,417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி சபைகளுக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சை க்குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு அரசியல் கட்சியினதும் ஒரு சுயேச்சைக்குழுவினதும் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு பிர ஜைகள் முன்னணி தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு முஸ்தபா ஜெஸ்லி தலைமையில் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் நிராக ரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட ஐ. ம. சு. மு., ஐ. தே. க., ஜே. வி. பி. உட்பட 10 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் வேட்புமனுக் களை ஐ. ம. சு. மு. செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் தாக்கல் செய்தனர்.

பதுளை பதுளை தினகரன் விசேட நிருபர்

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் அங்கீகரிக்கப்பட்ட இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

லங்கா சம சமாஜக்கட்சி மற்றும் ஜனசெத்த பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளும் பன்னிரெண்டு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டவைக ளாகும்.

எட்டு அரசியல் கட்சிகளினதும் 24 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட னவாகும்.

வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்ட தில் ஏற்பட்ட குளறுபடிகள், அபேட் சகர்களின் வயது, வேட்பு மனுவில் கையெழுத்திடாமை, முறையாக தயாரிக்கப்படாமை ஆகிய தவறுகளி னாலேயே மேற்படி வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை அம்பாறை மத்திய குறூப்

அம்பாறை மாவட்டத்தில் அரசி யல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 164 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5 கட்சிகளினதும் 43 சுயேச் சைக் குழுக்களினதும் வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சி சம்மாந்துறை பிரதேச சபைக்குத் தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் ஈழவர் ஜனநாயகக் கட்சியின் மூன்று வேட்புமனுக்களும் ஜனசெத முன்ன ணியின் ஒரு வேட்புமனுவும் நிராகரி க்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட் டத்தில் ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., மு. கா., தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

திருகோணமலை

திருணேமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர் தல் நடைபெறுகிறது. இங்கு ஐ. ம. சு. மு. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், நவச மசமாஜக் கட்சி, ஐ. தே. கட்சி, ஜே. வி. பி. அடங்கலான கட்சிக ளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டி யிடுகின்றன.

குச்சவெளி பிரதேச சபைக்கு ஐ. ம. சு. மு., மு. கா. இணைந்து முன்னாள் ஐ. தே. க. பிரதேச சபைத் தலைவர் ஆதம்பாவா தெளபீக் தலைமையில் போட்டியி டுகிறது. ஐ. தே. கட்சி தமிழரசுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவும் களம் இறங்கியுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு 12 பேர் கொண்ட பெண்கள் அணியினரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். லிபரல் கட்சி கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, பட்டணமும் சூழல் பிரதேச சபையில் போட்டியிடுவதாக அக்கட்சியின் கி. மா. அமைப்பாளர் ஜே. காசிம் தெரிவித்தார்.

ஐ. தே. கட்சி, ஜே. வி. பி., ஐ. ம. சு. மு. அனைத்துப் பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி கந்தளாய், ஹோமரங்கடவல தவிர ஏனைய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. குணவர்த்தனா (பா. உ) எம். எஸ். தெளபீக், ஜே. வி. பி. சார்பாக கி. மா. சபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ, ஐ. தே. க. சார்பாக திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டொக்டர் அனுர சிரிசேன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள இரண்டு நகர சபைக ளுக்கும் ஒரு பிரதேச சபைக்குமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 27 உறுப்பினர்களை தெரிவு செய்வதற் காக 564 உறுப்பினர்கள் போட்டியிடு கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிக ளும் 42 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ. தே. க. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடு தலை முன்னணி, எல்லோரும் பிர ஜைகள் எல்லோரும் மன்னர்கள் ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய் வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அமை ச்சர் எம். எஸ். அமீரலி, பிரதி அமை ச்சர் மகளிர் விவகார எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், மாகாண சபை உறுப்பினர் களான பூ. பிரஷாந்தன், பீரதீப் மாஸ்டர் ஆகியோர்கள் வருகை தந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் படுர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பி னர் யூ. எல். எம். முபீன் உள்ளி ட்டோரும் வருகை தந்திருந்தனர்.

நிராகரிப்பு புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வேட்புமனு பத்திரம் உட்பட 8 வேட்பு மனுப் பத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, நகர சபை, மற்றும் ஏறாவூர் நகர சபை ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குமாக 49 வேட்பு மனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் 8 வேட்பு மனுப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏறாவூர் நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுப்பத்திரம், மற்றும் ஐந்து சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுப்பத்திரங்கள் காத்தான்குடி நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள் கட்சியினதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வவுனியா வவுனியா விசேட நிருபர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் மூன்று சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல் அலுவலகம் தெரிவிக்கின்றது. வவுனியாவில் ஐந்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேச்சைக் குழுவுமே போட்டியிடவுள்ளன. இதனை வவுனியா தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஏ. எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

உரிய வகையில் வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாததினால் மூன்று சுயேச்சைக் குழுவினது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எட்டு அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், லிபரல் கட்சி, பூமிபுத்ர கட்சி, ஜனவிமுக்தி கட்சி, எக்ஸத் ஸமாஜவாத் கட்சி ஆகிய கட்சிகள் போடியிடுகின்றன.

மாத்தறை மாவட்டத்தில் 22 சுயேச்சை குழுக்கள் போட்டிக்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் 10 சுயேச்சைக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கம்பஹா நீர்கொழும்பு தினகரன் நிருபர்

எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்ட அத்தனகல்லப் பிரதேச சபை மற்றும் மினுவாங்கொடப் பட்டின சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (28) கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது.

மேற்படி உள்ளூராட்சி மன்றங்க ளினதும் வேட்பு மனுக்கள் கம்பஹா மாவட்ட தேர்தல் செயலாகத்தினால் நிராரிக்கப்பட்டதென மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டதற்கான கார ணங்கள் பற்றி தேர்தல் செயலக அதிகாரிகளிடம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் வினவிய போது தேர்தல் ஆணை யாளர் எழுத்து மூலம் இதுபற்றி அறிவிப்பார் என கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் தெரி வித்தார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்ன த்தில் கம்பஹா மாவட்ட பியகம பிரதேச சபைக்கான வேட்புமனுக் கள் மாவட்ட தேர்தல் செயகலத் தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக