13 ஜூலை, 2011

அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு


அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால், பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பாதிப்பு அடையாது என அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அபாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசினால் பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 800 மில்லியன் டொலரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்புச் செலவீனங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக