13 ஜூலை, 2011

வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்

வடக்கிற்கு செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும்முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்த அந்த நடைமுறை கடந்த வாரம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் வடகிற்கு பிரயாணம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருந்த நடைமுறை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்திக்கச் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக