13 ஜூலை, 2011

சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்


சிலாபம் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் நீர்கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு அறுவை சிகிச்சை கூடங்களினதும் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

சிலாபம் வைத்தியசாலை புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையாக விளங்குவதோடு, கல்பிட்டிய, ஆனைமடுவ பிரதேச வைத்தியசாலையிலுள்ள நோயாளிகள் இங்கு மாற்றப்படுகின்றனர்.

இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 அறுவை சிகிச்சைகள் வரை இடம்பெறுவதோடு, இரு அறுவைசிகிச்சை கூடங்களிலும் 7 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக