13 ஜூலை, 2011

2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு


விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.

2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக