1 ஜூலை, 2011

ஆமைகளின் படையெடுப்பால் நியூயோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு




அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்படத் தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் இவற்றை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடற்கரை பகுதியில் விடுவித்துள்ளனர்.

இதனால், விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக