1 ஜூலை, 2011

சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதனை அமைச்சே தீர்மானிக்கும்: அனுர

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட வீடியோக் காட்சிகள் பொய்யானவை அது முழுமையாகவே நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா? இல்லையா? என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

சனல் 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள படம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ இன்றேல் பதிலளிப்பதற்கோ அரசாங்கம் தயாரில்லை எனினும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் ஊடாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா இல்லையா என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக