1 ஜூலை, 2011

மட்டக்களப்பு பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினரால் உயர்மட்ட மாநாடு

மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை இடம்பெற்ற வங்கிக்கொள்ளைச் சம்பவத்தையடுத்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்ட பாதுபாப்பு மாநாடு இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈரோஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புணாணை இராணுவ தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே மட்டக்களப்பு 234வது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் செனவிரத்ன மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக