1 ஜூலை, 2011

தமிழருக்கு சுய உரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து




இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுய உரிமை வழங்கப்பட வேண்டும். இதனை இந் தியா வலியுறுத்தி வருகின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் பத்திரிகைகளின் ஆசிரியர்களை புதன்கிழமை காலை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14 ஆம் திகதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சி னை யை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். எனவே இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக