11 ஜூலை, 2011

நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக