10 ஜூலை, 2011

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்




போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைக் குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை நிலையை ஐ.நா. தெளிவுபடுத்த வேண்டும் என்றுஅவுஸ்திரேலிய செனட்சபை வலியுறுத்தியுள்ளது.

அந்த நாட்டின் செனட்சபையின் உறுப்பினரான பொப் பிறவுண் இது தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்தப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஏகமனதாக அது நிறைவேறியது. வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக செனட்சபையில் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை. வழமைக்குமாறாக இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகாரஅமைச்சர் கெவின் ரூட் கவனம் எடுக்க வேண்டும் என்று பொப் பிறவுண் கடித மூலம் அவரைக் கேட்டுள்ளார்.

ஐ.நா.வில் உள்ள தமது அரசின் சார்பிலான செயலகம் ஊடாகத்தான் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் மீள் விசாரணை செய்யுமாறு கோரவிருப்பதாக கெவின் ரூட் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக