11 ஜூலை, 2011

லியாம் பொக்ஸ் நாடுதிரும்பினார்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்புத் து றை அமைச்சர் லியா ம் பொக்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.

பிரத்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலமாக நேற்றுக்காலை 10.15 மணியளவில் டோஹா கட்டார் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகைதந்த லியாம் பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார்.

இலங்கைக்கு விஜயத்தின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சனிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு சொற்பொழிவில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை நவம்பர் மாத்திற்குள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லியாம் பொக்ஸ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் எதிர்தரப்பில் எவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக