19 ஜூன், 2011

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவுக்கு அனுப்பும் திட்டம் தொடரும்: ஜூலியா




இலங்கை உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத புகலிடக்கோரிக்கையாளர்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு எதிராக அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் இந் தத் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரி மைப் பேரவை ஆணையாளர் மற்றும் பல் வேறு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.

மலேஷியாவிற்கு புகலிடக் கோரிக்கையா ளர்களை அனுப்பி வைக்கும் திட்டம் மனிதாபி மானமற்றது என அவுஸ்திரேலிய க்ரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, படகுப் பயணிகளை மலேஷி யாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில் பல் வேறு பாதக நிலைமைகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக