19 ஜூன், 2011

யுத்த விமானங்களை வழங்குவது குறித்து ஐ.நா.வின் பதிலை எதிர்பார்க்கும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணி களுக்கு யுத்த விமானங்களை வழங்குவது தொடர்பில் ஐ.நா. வின் பதிலுக்காக காத்திருப் பதாக இலங்கை விமானப்படை தெரிவித் துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக இலங்கைக்குச் சொந்த மான விமானங்களை ஐ.நா. சபைக்கு வழங் கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, யுத்த மற்றும் பயணிகள் விமானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்க விமானப்படை தீர்மானித்துள்ளதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பதிலுக்கு காத்திருப்பதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் விமானிகள் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை 50 வருடங்களாக ஈடுபட்டு வருவதுடன் ஆயி ரத்து 200 அமைதி காக்கும் படையினர் பணி களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக