4 மே, 2011

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் கைதியின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் கடந்த 09 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும் மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ சார்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி திருநாவுக்கரசுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம் மனுவில் குறித்த மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ 23.02.2009இல் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின் அவர் வரலபட பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு அங்கு 6 மாதங்கள் வரையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த காலப்பகுதியில் அவர் பொலிஸாரினால் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட கைது இடம்பெற்றவேளையில் கைதுக்கான காரணம் தனக்கு தெரிவிக்கப்படவில்லையென்றும் இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த அடிப்படையில் தனக்கு மூன்று மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக