11 மே, 2011

பிரபாகரன் இஸ்லாமிய குழுவாயின் ஒசாமாவின் நிலைதான் உருவாகியிருக்கும்: டலஸ்

வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் குழுவினரும் இஸ்லாம் அடிப்படை வாதத்தில் உள்ள ஒரு குழுவாயின் மேற்கு உலக நாடுகள் ஒசாமாவை நடத்தியது போன்றே பிரபாகரன் குழுவையும் நடத்தி இருப்பர் என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றிலே உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இன்று ஒசாமா பின்லேடனுக்கு நடந்த அதே கதையை பிரபாகரனுக்கும் மேற்குலக நாடுகள் நடத்தி இருக்கும்.

நோர்வேயும் சக நாடுகளும் எமக்குப் பாராட்டுத் தெரிவித்திருப்பர். ஒசாமாவிற்கு ஒரு நீதியும் பிரபாகரனுக்கு இன்னொரு நீதியும் என்ற நிலை உருவாகி இருக்காது எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக