11 மே, 2011

வெடிபொருள் வெடித்ததில் 3 சிறுவர்கள் காயம்: யாழில் சம்பவம்

விளையாட்டுப் பொருள் என நினைத்து வெடிபொருளை எடுத்து விளையாடிய 3 பாடசாலைச்சிறார்கள், அப் பொருள் வெடித்ததால் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மாதகல் சகாயபுரத்தைச் சேர்ந்த எஸ். சானுஜன்( வயது 06)அவரது தம்பியான எஸ்.சாருஜன் (வயது 2) அயல் வீட்டுச் சிறுமியான ஜே. கம்சினி (வயது 4) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளை வீதியோரமாக கிடந்த வெடிபொருளை கண்டெடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அதனை விளையாட்டுப் பொருள் என நினைத்து வெடிபொருளுடன் விளையாடியவேளையில் அது வெடித்துள்ளது. குறித்த சிறுவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக