6 ஏப்ரல், 2011

நாட்டை மீட்டெடுத்திருக்காவிட்டால் சூடான், வட ஆபிரிக்க நாடுகளுக்கு நேர்ந்த கதியே எமக்கும் ஏற்பட்டிருக்கும்


மனிதாபிமான நடவடிக்கை மூலம் நாட்டை மீட்டெடுத் திருக்காவிட்டால் சூடான், வட ஆபிரிக்க நாடுகளுக்கு நேர்ந்த கதியே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வளை குடா நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள உக்கிரமான சூழ்நிலையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளைகுடா, வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் நேர்ந்திருக்கும். எனினும் நாம் காலந்தாழ்த் தாது எமது நாட்டைப் பாது காத்துக்கொண்டுள்ளோம்.

நாட்டை மீட்டது மட்டுமன்றி சகல இன, மத மக்களும் வாழக்கூடிய வித த்தில் சுதந்திரமான சூழலையும் எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு உட்பட சகல மக்களும் சகலதையும் அனுபவிக்க வழிசெய்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடை பெற்றது. நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 3800 பேருக்கு ‘ரன்பிம’ உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, விமல் வீரவன்ச, பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன், முத்து சிவலிங்கம், ஜனாதிபதியின் செய லாளர் லலித்வீரதுங்க, மேல் மாகாண ஆளுநர் அலவி மெள லானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ் வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக் கையில்:-

நாட்டில் பாரிய அபிவிருத்தி யுக மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி பற்றி நாம் கூறும் போது அம்பாந்தோட்டை துறை முகம் பற்றியும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பற்றியுமே குறிப் பிடுகின்றோம். ஆனால் இது போன்ற எத்தனையோ அபிவி ருத்தித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாம் வெளியிடுவதில்லை.

காணி உறுதிப்பத்திரம் வழங்குத லும் அவ்வாறுதான், எமது ஆட்சிக் காலத்தில் இது காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ஒன்பதாவது வைபவமாகும். இதனால் ஆயிரக் கணக்கானோர் நன்மையடைகின் றனர்.

நாம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினாலும் அக்காணிகள் பிர யோசனப்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெ ழுப்புவதன் அடுத்த கட்டமாக குடும்ப பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் வேலைத் திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பத்து இலட்சம் வீடு களை இலக்காகக் கொண்டு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தத்தமது காணிகளில் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி குடும் பத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் அவற்றைப் பயன்படு த்துதல் அவசியம். நாம் சுப்பர் மார்க்கட்டுகளில் போய் மரக்கறி வாங்குபவர்களாக இருக்கக் கூடாது. நாமே பயிர்செய்து பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

இது குடும்பப் பொருளாதாரத் துக்கு மட்டுமன்றி நாட்டின் பொரு ளாதாரத்திற்கும் செய்யக் கூடிய பங்களிப்பாகிறது. ‘திவி நெகும’ திட்டத்தின் பங்காளிகளாக சகலரும் மாற வேண்டும்.

இன்று இந்தக் காணி உறுதிப் படுத்திரம் வழங்கும் வைபவத்தில் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் பெருமளவு மக்கள் அலரி மாளிகைக்கு வருகை தந்துள் ளனர். அவர்களை நான் வரவேற்று மகிழ்ச்சியடைகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக