6 ஏப்ரல், 2011

சர்வதேச நாணய நிதியம் 6வது கொடுப்பனவையும் வழங்கியது

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு உதவும் வகையிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆறாவது மீளாய்வினை வழங்க முன்வந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஆறாவது மீளாய்வாக 218.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இக்கடனுதவியை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட அடைவுகளை இலங்கை பூர்த்திசெய்திருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி கோஷி மதாய் தெரிவித்தார்.

ஆறாவது மீளாய்வை வழங்குவதற்கான அடைவுகளான வெளிநாட்டு சேமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து அடைவுகளையும் இலங்கை பூர்த்திசெய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பணவீக்கம் பாரியளவில் இல்லையென்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கொள்கையும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக இலங்கை அரசாங்கம் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட செலவீனங்களுக்கு மேலதிகமான செலவீனங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் ஒதுக்கீடுகள் பலமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாவது மீளாய்வை அடைவதற்கு விதிக்கப்பட்ட அடைவுகளை இலங்கை சரியான முறையில் பூர்த்திசெய்யப்பட்டி ருக்கவில்லையென வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை ஒப்புதலளிக்கப்பட்டதற்கமைய இதுவரை 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தொகையாகப் பெறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக