6 ஏப்ரல், 2011

ஹொங்கொங் குடிவரவு அதிகாரிகளுடன் இலங்கைப் பயணி மோதல்: ஆறு பேர் காயம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த பயணியொருவருடன் ஏற்பட்ட மோதலினால் ஹொங்கொங் குடிவரவு அதிகாரிகள் ஐவர் காயமடைந்தனர்.

குடிவரவு கருமபீடத்தில் பயண ஆவணமொன்று தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே அம்மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பயணியைஅமைதிப்படுத்துவதற்கு முயன்றபோது குடிவரவு அதிகாரிகள் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன்போது அப்பயணியும் காயமடைந்துள்ளார். இவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 41 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹொங்கொங் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக