4 ஏப்ரல், 2011

எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்றவாறு பஸ் கட்டணங்களும் உயர்வடையும்


அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலைகளுக்கு ஏற்ப பகட்டணங்களும் அதிகரிக்கும். எவ்வாறாயினும் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உவிசேட சந்திப்பின் பின்னரே கட்டண அதிகரிப்பு தொடர்பாக உறுதியான நிலைஅறிவிக்க முடியும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண கூறுகையில்,

தனியார் பஸ் கடடணங்களை அதிகரிப்பதில் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த காலங்களில் பாரிய முரண்பாடுகள் தோன்றியது. அதிகரிக்கப்பட வேண்டிய தனியார் பஸ் கட்டணங்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் இதனை செய்ய முடியாது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் எரிபொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்தது. பெற்றோல் 10 ரூபாவினாலும், டீசல் 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பஸ் கட்டணங்களிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் இல்லையென்றால் உள்நாட்டு தனியார் துறை போக்குவரத்தை பாதுகாக்க முடியாமல் போய்விடும். எனவே எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை எமது சங்க உறுப்பினர்கள் கூட உள்ளனர். எனவே இந்தச் சந்திப்பின் பின்னர் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக