4 ஏப்ரல், 2011

யாழிலிருந்து மோட்டார் சைக்கிளில் கொழும்புக்கு வந்தவர் மாயம்

இளவாலையில் இருந்து கொழும்புக்குச் செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இளவாலையைச் சேர்ந்த இராஜேந்திரமோகன் (வயது 34) என்பவரே காணாமல்போனவராவார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர் அலுவலக வேலைகளுக்காக கொழும்புக்குச் செல்வதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் தொடர்பான எந்தத் தகவலும் தமக்குக் கிடைக்கவில்லை என குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக