19 பிப்ரவரி, 2011

தெங்குச் செய்கையாளர்களுக்கு மானிய உரம் வழங்குவதில் முறையான செயல் திட்டம்





வேளாண்மை செய்கைக்கு பசளையை மானிய அடிப்படையில் வழங்கப்படும் போது ஊழல் மோசடிகள் இடம்பெறுவது போலல்லாமல் தெங்குச் செய்கையாளர்களுக்கு பசளையை மானிய அடிப்படையில் வழங்கும் போது முறையான செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.

சரியான முறையில் தெங்குச் செய்கையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு பசளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தெங்குப் பசளை மானிய அடிப்படையில் வழங்குவது தொடர்பாக ஊடகங்களில் பிரபல்யம் அடைந்திருந்தன. அந்த முறையில் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்த மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் மானிய அடிப்படையில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந் நாட்களில் அதற்குத் தேவையான விண்ணப்பங்கள் பாரம் எடுக்கப்படவுள்ளன. தெங்கு செய்கையாளர் சபையினர் பிரதேச காரியாலயத்திற்கு சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் ஊடாக இந்த விண்ணப்பங்களை ஒப்படைத்திருப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தகைமையுடைய தெங்குச் செய்கையாளர்கள் கமநல சேவை மத்திய நிலையம் மற்றும் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்த பசளை விநியோகஸ்தர்களின் பிரதிநிதிகளின் மார்க்கமாக பசளையை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக