19 பிப்ரவரி, 2011

இடி, மின்னல், மழை: விழிப்பாக இருக்க எச்சரிக்கை






அடுத்துவரும் சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் நேற்று வேண்டுகோள் விடுத்தது.

அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டி ஹேவகே நேற்று கூறினார்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்றும் வீச முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோடை காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது திறந்த வெளியில் நடமாடுவதையும், நீர் நிலைகளுக்கும், உயர்ந்த மரங்களுக்குக் கீழ் நிற்பதையும், மின்சாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக