19 பிப்ரவரி, 2011

பெண் முடிச்சுமாறிகளின் திருட்டுகள்

கொழும்பிலும் நாட்டின் பிரதான நகரங்களிலும் இப்போது ஆண் முடிச்சுமாறிகளை (பிக்பொக்கட்ஸ்) விட பெண் முடிச்சுமாறிகளின் திருட்டுகள் அதிகரித்து இருப்பதாக பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளது.

அர சாங்க, தனி யார் துறை யினரின் சம்பள நாட்களிலும் அதற்கு பின்னர் ஓரிரு தினங்களுக்கும் இந்த பெண் முடிச்சுமாறிகளின் அட்டகாசம் கட்டுப்பாட்டை இழந் துள்ளது என்று பொலிஸார் கூறுகி றார்கள்.

இவர்கள் நல்ல செல்வாக்கான குடும்பப் பெண்களை போன்று நவநாகரீகமான உடையணிந்து சனநெரிசல் மிக்க பஸ்களிலும் ரயில் வண்டிகளிலும் பிரயாணம் செய்து நெருக்கடி காரணமாக அசெளகரிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் போன்று நடித்து அப்பாவி ஆண்களின் உடலில் உரசி மெல்ல தமது மெல்லிய விரல்களை விட்டு ஆண்களின் பேஸ்களை திருடிவிடுகிறார்கள்.

இத்தகைய பல முடிச்சுமாறி திருட்டுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்த சாகசக்கார பெண்களை கைது செய்து தண்டிப்பதற்காக நல்ல உடல் கட்டுடைய பொலிஸ் பணியில் பயிற்சி பெற்ற பெண் பொலிஸார்களை பஸ்களிலும், ரயில்களிலும் பொது இடங்களிலும் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இந்த பெண் முடிச்சுமாறிகளிடம் இருந்து ஆண்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் பஸ்களிலும் ரயில் வண்டிகளிலும் தங்களிடம் நெருங்கி உடல் ஸ்பரிசத்தின் மூலம் ஆண்களின் உணர்வுகளை தூண்டச் செய்யும் பெண்கள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரிக்கை செய்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக