15 பிப்ரவரி, 2011

விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட இருவர் பலி


நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் பயணிகள் பஸ்ஸும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் நால்வர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த கடுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பாத்திமா சரீனா என்பவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையொன்றும் பலியானதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட ஏனையோரே காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் கஜிகம பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது முச்சக்கர வண்டியில் சென்ற ஆறு பேரும் காயமடைந்த நிலையில் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதியை கைது செய்துள்ள நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக