14 பிப்ரவரி, 2011

உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க வெல்லும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். இதனால் அரசு வெள்ள அனர்த்தத்தை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்கிறது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி வெற்றிபெறும் மன்றங்களின் தலைவர், உப தலைவர் பதவிகளுக்கு உரியவர்களை விருப்பு வாக்குகளை மட்டும் கவனத்தில் கொள்ளாது, பல தகைமைகளைக் கவனத்திற்கொண்டு தெரிவு செய்யும். இதில் முக்கியமாக கட்சியின் வெற்றிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக