15 பிப்ரவரி, 2011

ரயிலின் முன் பாய்ந்து யுவதி தற்கொலை: சீனன்குடாவில் சம்பவம்





கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீனன்குடக்ஷிவை சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

கிணற்றடியில் உடைகளை கழுவிக் கொண்டிருந்த வேளையில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிக் கொண்டிருந்த மகள் ரயிலைக் கண்டதும் அதன் முன் பாய்ந்ததாக அவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக