15 பிப்ரவரி, 2011

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 3,21,595 பேர் விண்ணப்பம்



உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 3,21,595 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் என்று தேர்தல்கள் திணைகளம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4,77,742 பேர் விண்ணப்பித்திருந்தனர். மார்ச் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக் கான தபால்மூல வாக்குப்பதிவை மார்ச் 8ஆம், 9 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக