7 பிப்ரவரி, 2011

ரூ. 10,000 மில்லியனில் அபிவிருத்தி



தி தசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தில் 10,000 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி மூலம் இந்தப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார். வீதி, மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், குளங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் இந்த நிதி மூலம் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளுக்கு 4000 மில்லியன் ரூபாவும், மின்சார விநியோக வசதிக்கு 1000 மில்லியன் ரூபாவும் நீர் வழங்கலுக்கு 700 மில்லியன் ரூபா வீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒருவார காலத்திற்கு மனிதவள அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட் டார்.

சுமார் நூறு வருடங்களுக்கும் அதிகம் பழைமை வாய்ந்த புத்தலை கிராமிய வைத்தியசாலை மக்கள் வங்கியினால் 160 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மிகவும் குறுகிய காலத்தில் மொனராகலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக