31 ஜனவரி, 2011

கூட்டமைப்பு - அரசிற்கு இடையில் வியாழனன்று மற்றுமொரு சுற்று பேச்சு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பிற்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கின் மனிதாபிமான, மீள்கட்டமைப்பு பணிகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட இனங்காணப்பட்ட விவகாரங்களுக்கு சீரான வகையில் தீர்வுகாண்பதற்காக இருத்தரப்பும் தொடர்ந்தும் நல்லிணக்கத்துன் பேச்சுக்களை முன்னெடுப்பது தீர்மானித்தது.

இந்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக