31 ஜனவரி, 2011

கிராம சேவகர்களின் சம்பளம் அதிகரிப்பு






கிராம சேவையாளர்களின் சேவை தரத்தை உயர்த்தி அவர்களது சம் பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலதிக கொடுப்பனவுடன் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவிருப்ப தாகவும் இதன் மூலம் கிராம சேவகர்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப இதுவரை கிராம சேவகர் என்று கூறப்பட்ட பதவி இனி ‘நிர்வாக கிராம சேவகர்’ என்று மாற்றப்படுவதுடன் அவர் களது மூன்றாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வாலும் இரண்டாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 1765 ரூபா வினாலும் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வினாலும் சிரேஷ்ட தரத்தைச் சேர்ந் தவர்களின் சம்பளம் 365 ரூபா வாலும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கிராம சேவகர்களின் கடமை நேரம், பதவியின் பொறுப்புகள், ஆகியவற்றை கணக்கில் எடுத்து இந்த சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக