31 ஜனவரி, 2011

அத். உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைவு பெ. வெங்காயம் 55/-, உ.கிழங்கு - 50/-






அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ அல்லது தட்டுப்பாடு ஏற்படவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. இவற்றின் விலை அதிகரித் தால் சதொச மூலம் இறக்கு மதி செய்து பாவனையாளர் களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் முட்டை, கிழங்கு, வெங்காயம், கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து அவற்றின் விலைகள் குறைந்தன என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் 135 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் நேற்று (30) கிலோ 55 ரூபாவாகவும், 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 முதல் 50 ரூபாவுக்கும் 195 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பருப்பு 135 ரூபாவுக்கும் 290 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 200 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்துள்ளதாக மொத்த வர்த்தக சங்கம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக