11 டிசம்பர், 2010

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீதான தாக்குதல்




இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது பாரியார் கமிலா பயணம் செய்த கார் நேற்று தெற்கு லண்டனில் தாக்கப்பட்டமையானது லண்டனின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசு மேற்கொண்ட முடிவை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸும் அவரது பாரியாரான கமீலா பார்க்கரும் சென்று கொண்டிருந்த காரின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் காரை உதைத்து சேதம் ஏற்படுத்த முற்பட்டதுமன்றி வெள்ளை நிற திரவத்தினை காரின் மீது எரிந்துமுள்ளனர்.

எனினும் அவர்கள் இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இத்தாக்குதலில் சுமார் 20 வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முழுப்பொறுப்பினையும் பொலிஸாரே ஏற்கவேண்டும் எனவும் அவர்களின் அஜாக்கிரதையே இதற்கான காரணம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சாடியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக